- ஃப்ரீடம் பாந்தர்
- யூனியன் அரசு
- கோயம்புத்தூர்
- கோயம்புத்தூர் விடுதலைப் புலிகள் கட்சி
- ஏகாவாய் தெற்கு தாலூக்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
கோவை, ஜன. 6: கோவை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ேகாவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ‘’தமிழ்நாட்டில் புயல், மழையால் பாதிக்கப்பட்ட நிகழ்வை, தேசிய பேரிடராக அறிவித்து, மாநில அரசு கோரியை நிதியை, ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும்’’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை மாநகர் மாவட்ட செயலாளர் கோவை குமணன் தலைமை தாங்கினார்.
கோவை தெற்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொல்குடி.மைந்தன், கோவை மேற்கு மாவட்ட செயலாளர் கோவை குரு, கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் ஸ்டீபன் சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இளைஞர் அணி செயலாளர் சங்கதமிழன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் இளவரசன், மாவட்ட அமைப்பாளர் கோவை ராசா, திமுக நிர்வாகிகள் பி.நாச்சிமுத்து, நா.முருகவேல், டெம்போ சிவகுமார், இரா.நாகராஜ், டவுன் ஆனந்த், சபரி கோபால், இரா.ரவிச்சந்திரன், மு.சந்திரசேகரன், ராசன், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் கருப்பசாமி, ஐஎன்டியுசி பொதுச்செயலாளர் பாசமலர் சண்முகம், மாநகர் மாவட்ட மதிமுக செயலாளர் கணபதி செல்வராஜ், சேதுபதி, முருகேசன்,
குடியரசு, துரை இளங்கோவன், பிரபு, கண்ணகி, நிலா மணிமாறன், கரிகாலன், கோட்டை சேது, திருமா.எழிலன், விடுதலை அன்பன், முகமது அலி, ஆதிசங்கர், சிங்கை மோகன், பாலகிருஷ்ணன், கோவை தமிழன், சிறுத்தை ஹக்கீம், தளபதி ரபிக், சாவடி ராஜன், சித்ரா, கவிதா, மாணிக்கம், வழ.நீலமேகம், குயின்ஸ் மனோகரன், இளவேனில், ராகவன், சாலமன், ஆட்டோ சல்மான், கோகுல் உள்பட பலரும் பேசினர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து விடுதலை சிறுத்தை ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.